‘மாயி படத்தில் வாம்மா… மின்னல்’ காமெடியில் கலக்கிய நடிகை இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?


தமிழ் மீம் கிரியேட்டர்களின் காவல் தெய்வம் வைகைப்புயலின் நகைச்சுவைக்கு பலரும் அடிமை. வருடத்திற்கு 20 படங்களில் நடித்து வந்த அவர் அரசியலில் மூக்கை நுழைத்து தன்னுடைய பாதையில் தானே முள்ளை வீசிக்கொண்டார்.

இவர் நடிப்பில் உருவாகும்படங்கள் வெற்றியோ, தோல்வியோ இவருடைய நகைச்சுவை மட்டும் எப்போதும் ஹிட் ஆகிவிடும்.


அந்த வகையில் நடிகர் சரத்குமார் நடித்த மாயி படத்தில் வாம்மா… மின்னல்.. காமெடி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு காட்சியாக இன்றும் உள்ளது.

இந்த காட்சியில் மின்னல் போல வந்து செல்பவர் நடிகை தீபா. இந்த படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். இவரை அனைவரும் மின்னல் தீபா என்று தான் அழைக்கிறார்கள். தற்போது வாணி ராணி மற்றும் யாரடி நீ மோகினி போன்ற தொலைகாட்சி சீரியலில் மாலதியாக நடித்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!