ஆத்தாடி.. அவர் ஆடியதை பார்த்து எனக்கே ஒரு வைப்ரேஷன் வந்தது..!! நடன இயக்குனர் புகழாரம்..!!


நடிகர் விஜய் என்றால் ரசிகர்கள் மனதில் முதலில் தோன்றுவது அவரது டான்ஸ் தான். தற்போது பிரபல நடன இயக்குனர் ஷெரிப் தெறி படத்தில் பணியாற்றியபோது நடந்த சம்பவம் பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

“அன்று விஜய்க்கு காலை அசைக்க முடியாத அளவுக்கு காலில் சுளுக்கு பிடித்திருந்ததாம். அதை யாரிடமும் கூறவில்லை. ராங்கு பாடலில் அவர் அப்போதும் தொடர்ந்து ஆடினார். பைனல் ஸ்டெப் அவர் ஆடியதை பார்த்து எனக்கே ஒரு வைப்ரேஷன் வந்தது.”

“டான்ஸ் பின்னனியில் இருந்து வரவில்லை என்றாலும் விஜய் எப்போதும் மற்றவர்கள் ஆடுவதை பார்த்து உணர்ந்துகொள்வார். அப்படியே கேமரா முன்பு ஆடிவிடுவார். அவருக்கு எல்லாமே தெரியும். அவரை தனியாக விட்டால் ஒரு 100 படத்திற்கு கூட நடன இயக்குனராக பணியாற்றிவிடுவார். அவ்வளவு திறமை உள்ளது” என ஷெரிப் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!