அடம்பிடித்த ஒல்லி நடிகரின் கதாநாயகியால் கடுப்பாகிய இயக்குனர்..!! என்ன செய்தார் தெரியுமா..?


மலையாளத்தில் காதலான படம் மூலம் பிரபலமான நடிகை, தமிழில் ஒல்லி நடிகருடன் ஒரு படத்தில் நடித்தாராம். ஆனால், எதிர்பார்த்தளவிற்கு தமிழில் வாய்ப்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்று தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறாராம்.

தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் கேரவன் கேட்டு படக்குழுவினரை தொல்லை செய்துள்ளாராம். அதிக வாடகை உள்ள கேரவன் தான் எனக்கு வேண்டும் என்றும் அதில் மற்றவர்கள் யாரும் வரக்கூடாது என்றும் நடிகை நிபந்தனை விதித்தாராம். இதனால் வேறு வழியின்றி இரண்டு கதவு கேரவனை படக்குழுவினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்களாம்.

மேலும் ஆடம்பர வசதிகள் இல்லை என்று தகராறு செய்ததாகவும், அமைதியாக இருக்கும்படி சமரசப்படுத்திய தனது ஊழியரை வேலையில் இருந்து நீக்கி விட்டதாகவும் கிசுகிசு கிளம்பி உள்ளதாம். இதனால் படக்குழுவினர் அவர்மீது புகார் கூறி இருக்கிறார்களாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!