தான் செய்த கேவலமான செயலால் மக்களிடம் வசமாக சிக்கிய பிரபல சீரியல் நடிகர்..!!


தொலைக்காட்சி தொடர்கள் குடும்ப பெண்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்னெவென்று சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் நடித்து வருகிறார் நடிகர் மானஸ் சவாலி. இவரை, அவரது தம்பி மற்றும் தாயின் முன்னிலையில் பொதுமக்கள் பலர் திட்டியுள்ளனர். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ஒரு நாள் எனது தம்பியை பஸ் ஏற்றிவிடுவதற்காக வெளியே சென்றேன். அப்போ என்னை பார்த்த பலரும் என்னுடைய தாய் மற்றும் தம்பி இருக்கும் போதே கேவலம் கேவலமாக திட்ட ஆரம்பித்து விட்டனர். வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு கேவலான வார்த்தைகளால் திட்டுகிறார்கள். நான் சீரியலில் செய்யும் வில்லத்தனத்தை மனதில் வைத்துக்கொண்டு நான் நிஜத்தில் வெளியே சென்றாலும் எனக்கு திட்டு விழுகிறது.

இதனால் நான் கோபப்படவில்லை. என்னுடைய வேலையை நான் சரியாக செய்துள்ளேன். அதனால் தான்அ வர்கள் திட்டும் அளவிற்கு என்னுடைய கதாபாத்திரம் வெளிப்பட்டுள்ளது. மக்களிடம் அந்த அளவுக்கு என்னுடைய கதாபாத்திரம் ரீச் ஆகியிருபப்து எனக்கு மகிழ்ச்சியில் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!