இரவில் தூங்காமல் விழித்திருக்கும் பிரபல நடிகை..! எதற்காக தெரியுமா..?


மும்பை: நடிகை ஸ்ரீதேவி தனது மகள்களை நினைத்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுள்ளாராம்.

நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். குஷியின் 17வது பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராமில் அவரின் புகைப்படத்தை வெளியிட்டார் ஸ்ரீதேவி.

மூத்த மகள் ஜான்வி தாய் வழியில் நடிகையாக விரும்பி பயிற்சி எடுத்து வருகிறார்.


பார்ட்டிகள்
மகள்கள்

பாலிவுட்டில் நடக்கும் பார்ட்டிகளில் ஜான்வி, குஷி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இது தவிர தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்கிறார்கள். குஷியை விட ஜான்வியை பார்ட்டிகளில் அதிகம் பார்க்க முடிகிறது.

கவலை
இரவு


இரவு நேரத்தில் மகள்கள் பார்ட்டிக்கு சென்றால் அவர்கள் வீட்டிற்கு வரும் வரை தூங்காமல் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருப்பது போன்று இருப்பதாக ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

ஜான்வி
படம்

மராத்தி படமான சாய்ரத் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் ஜான்வி அறிமுகமாகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவது போன்று தெரியவில்லை.


கரண் ஜோஹார்
கோபம்

தனது மகள் ஜான்வியை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கூறிவிட்டு அது பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கும் இயக்குனர் கரண் ஜோஹார் மீது ஸ்ரீதேவி கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#