என்னுடைய அம்மாவின் இடத்தில் என் தங்கை இருக்கின்றாள்..!! ஜான்வி உருக்கம்..!!


கடந்த பிப்ரவரி மாதம், துபாயின் உறவினர் திருமணத்திற்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரழந்தார். இதனால் திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்தது.

இந்நிலையில், அவரது மூத்த மகள் ஜான்வி ’தடக்’ என்ற பாலிவுட் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவரது அறிமுகத்தை காண இந்தி சினிமாவே எதிர்பார்த்து அருகிறது.

தாய் ஸ்ரீதேவி மறைவிற்கு பிறகு, தற்போது தந்தை போனி கபூருடன் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் அடிக்கடி கலந்து கொண்டு வருகின்றனர்.

அதுபோன்ற ஒரு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட ஜான்வி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அம்மா ஸ்ரீதேவியின் மறைவு குஷி மற்றும் தந்தை போனி கபூருடன் நெருக்கத்தை அதிகப்படுத்தி உள்ளது”.

”தங்கை தான் எனக்கு இப்போ அம்மா” ஜான்வி கபூர்

”அம்மாவின் இழப்பை எதிர்பார்க்கவில்லை. ஆனால் எனக்கு அம்மாவாக தங்கை குஷி இருக்கிறார். குஷி என்மீது அதிகளவு பாசத்தை வைத்திருக்கிறாள்”

“என்னைவிட அவள் தான் பாசக்காறி. அம்மா இடத்திலிருந்து என்னை குஷி தான் கவனித்து வருகிறாள். விரைவில் அவளும் தனக்கான முத்திரை பதிப்பாள்” என்று தெரிவித்துள்ளார் ஜான்வி கபூர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!