படப்பிடிப்பில் அஜீத்தை பாலோ பண்ணும் பிரபல நடிகை..!! எதற்காக தெரியுமா..?


தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் என்றால் அது அஜீத், விஜய்தான். இருவருக்கும் ரசிகர்கள் சம அளவில் இருக்கின்றனர். இவர்களது ரசிகர்கள் இவர்களுக்காக தன்னுடைய உயிரையே கொடுக்கும் அளவுக்கு அவர்கள் மீது பாசம் வைத்திருக்கின்றனர்.

நடிகர் அஜீத்தின் ஸ்பெஷல் படப்பிடிப்பில் ஒருநாள் கண்டிப்பான எல்லோருக்கும் தன் கையால் பிரியாணி சமைத்து பரிமாறுவார். அதே போல விஜய்யும் தன் ரசிகர்களுக்காக பிரியாணி விருந்து வைப்பார்.


இந்நிலையில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் நாயகியான ராகுல் பிரீத் சிங் தற்போது இந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், தபுவும் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது படக்குழுவினர் நடிகை ராகுல் ப்ரீத் சிங்கிடம் பிரியாணி கேட்டனர். நடிகை ராகுலும், நடிகர் அஜீத் போல களத்தில் இறங்கி ஐதராபாத் பிரியாணி செய்து படக்குழுவினருக்கு விருந்து படைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!