சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இப்படியொரு நிலைமையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


விருதுநகா் மாவட்டம் ராஜபாலையத்தைச் சோ்ந்த கல்யாண சுந்தரம் என்பவா் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், கடந்த 2011ம் ஆண்டு முதல் தனியாா் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் என்பவா் தொகுத்து வழங்குகிறாா்.

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடைபெறும். தொகுப்பாளா் லட்சுமி ராமகிருஷ்ணன் பல்வேறு தனிமனித மற்றும் குடும்ப பிரச்சினைகளில் தலையிடுகிறாா். மேலும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் காரசாரமான விவாதங்கள் நடைபெறுகின்றன. தொகுப்பாளரின் கேள்விகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கவா்களை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பெண்களுக்கு சாியான முறையில் மாியாதை அளிப்பதில்லை. போதிய விழிப்புணா்வு இல்லாத ஆண், பெண்களை குறிவைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளது. மேலும் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தனியாா் தொலைக்காட்சி விதிமுறைகளை மீறி செயல்படுகின்றது. எனவே இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தாா்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!