ஒருவரின் உயிரை எடுக்க இன்னொருத்தருக்கு யார் உரிமை கொடுத்தது..? நடிகர் ஜெயம் ரவி ஆவேசம்..!!


வாரலாறே பதறும் ஒரு சம்பவத்தை தமிழகம் நேற்று கண்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஒரு கல்லூரி மாணவர் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழக மக்களை பதைபதைப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது போன்ற ஒரு கொடுமையை இதுவரை இன்றைய தலைமுறையினர் கண்டிருக்க மாட்டார்கள். மசோகக்கடலாக மாறியிருக்கும் தமிழகத்தில் பதில் சொல்ல வேண்டியவர்கள் யாரும் சரியான பதிலை கொடுத்ததாக தெரியவில்லை. ஆனால், பொதுமக்கள், நடிகர்கள், பொதுநலவாதிகள் என அனைவரும் தங்களது வேதனையை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி “ஒருவரின் உயிரை எடுக்க இன்னொருத்தருக்கு யார் உரிமை கொடுத்தார்கள், அப்பாவி மக்களை கொன்ற இந்த விஷயத்தில் எனது கடுமையான கண்டனத்தையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இதயம் கணத்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!