அறியாத வயசுல தெரியாம செய்துட்டேன்..!! சிக்கலில் சிக்கிய பிரபல நடிகை..!!


நடிகை காஜல் அகர்வால், விவிடி தேங்காய் எண்ணெய் நிறுவன விளம்பரத்தில் 2008-ம் ஆண்டு நடித்தார். இந்த விளம்பரம் இப்போதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக்கொண்டிருப்பதால் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார் காஜல் அகர்வால்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், நான் நடித்த விளம்பரத்தை ஒருவருடம் மட்டுமே ஒளிபரப்பவேண்டும். ஆனால் ஒரு வருட ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து ஒளிபரப்புகிறார்கள்.இதனால் தனக்கு ரூ. 2.5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆனால் விவிடி நிறுவனத்தின் தரப்பில், அந்த ஒப்பந்த பத்திரத்தில் காலக்கெடு எதுவும் குறிப்பிடபடவில்லை


என்றும் அதுபோன்ற ஒப்பந்தம் எதுவும் எழுதப்படவில்லை என்றும், எனவே அந்த விளம்பரத்தை எப்போது வேண்டுமானாலும் ஒளிபரப்ப எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறப்பட்டது.

இதையடுத்து காஜல் அகர்வாலின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது மட்டுமில்லாமல் மேலும் வழக்குக்காக விவிடி நிறுவனம் செய்த செலவை மொத்தமாக ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என காஜல் அகர்வாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அறியா வயதில், தெரியாமல் கையெழுத்து போட்டது இப்படி பழி வாங்குகிறதே..! என இதனால் கடுமையான மன உழைச்சலில் இருக்கிறார் காஜல் அகர்வால்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!