பிரபல சீரியல் நடிகைக்கா இப்படி ஒரு சோதனை…!!!


சினிமா நடிகைகளை போல சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் நிறைய ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆல்யா மாணசா.

இவர் அந்த சீரியலில் இருந்து வெளியேற இருப்பதாக நிறைய வதந்திகள் வந்திருக்கிறது. இதனை பார்த்த அவர் உடனே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் ராஜா ராணி சீரியலில் இருந்து விலக போவதாக நிறைய செய்திகள் வருகின்றன.


அதை யாரும் நம்ப வேண்டாம், நான் ராஜா ராணி சீரியலில் முழுவதும் நடிப்பேன், அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என பதிவு செய்துள்ளார்.

இப்போது தான் சீரியலில் நடிக்க தொடங்கியிருக்கிறேன் அதற்குள் வதந்திகளை பரப்புகிறார்களே என மாணசா மிகவும் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி