38 வயதில் திருமணமா..? பிரபல நடிகையின் முடிவால் அதிர்ச்சி..!!


தமிழ் சினிமாவில் தற்போது சில நடிகைகள் முன்னணி கதாநாயகி என்று கூறப்பட்டாலும், இவர்களை விட 90களில் இருக்கும் நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் அதிகம். அந்த வகையில், 90 களில் முன்னணி நடிகராக இருந்த கார்த்தி, விஜய், விஜய்காந்த், பிரபு தேவா, முரளி என பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் தான் கௌசல்யா.

இவர் ஏப்ரல் 19 என்னும் மலையாள படம் மூலம் பெரியத்திரையில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் காலமெல்லாம் காதல் வாழ்க என்னும் படம் மூலம் கதாநாயகியாக களம் இறங்கினார்.

பல ஹிட் படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து, அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.

தற்போது 38 வயதை எட்டியுள்ள கௌசல்யா திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இவரின் குடும்பத்தில் வரன் பார்க்க தொடங்கிவிட்டார்களாம். விரைவில் இவரது திருமண செய்தி வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!