விஷால் பட நாயகியின் வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!! எதனால் தெரியுமா..?


திருமணத்திற்கு பிறகு ஆளே மாறி காட்சியளித்த ‘வெடி’ பட நடிகை சமீரா ரெட்டியைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நடிகை சமீரா ரெட்டி 2008ல் சூர்யா நடிப்பில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் அவர் தமிழில் பல படங்களில் நடித்தார். மாதவனுக்கு ஜோடியாக ‘சேட்டை’ படத்திலும், விஷாலுக்கு ஜோடியாக ‘வெடி’ படத்திலும் நடித்தார். இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார். ஆனால் இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.


அப்படி திருமணத்திற்கு பிறகு நிறைய நடிகைகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ‘வாரணம் ஆயிரம்’ என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் சமீரா ரெட்டி. இவர் சமீபத்தில் பெண்களுடன் நடக்கும் கொடுமைகளை எதிர்த்து நடந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது நம்ம சமீரா ரெட்டியா இது என வியப்புடன் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி