காஸி படத்திற்கு தேசிய விருது..! செம்ம கொண்டாட்டத்தில் பிரபல நடிகை..!!


தேசிய விருதிற்கு தேர்வாகியுள்ள காஸி தெலுங்கு படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தாலும் அது தனக்கு நிறைவாக அமைந்ததாக நடிகை டாப்ஷி பண்ணு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று 65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கு மொழிக்கான சிறந்த படமாக ராணா டகுபாதி நடித்திருந்த காஸி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை டாப்ஷி ஆடுகளம், பிங் படங்களை தொடர்ந்து தனது நடிப்பில் உருவான படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது இது மூன்றாவது முறை என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி