எனக்கு பொருந்தாத வேடங்களில் நடிக்க மாட்டேன்..!! பிரபல நடிகை அதிரடி முடிவு..!!


படங்களில் எல்லாவித கேரக்டர்களுக்கும் நான் பொருத்தமாக இருக்கமாட்டேன் என்று நடிகை சாய்பல்லவி கூறியுள்ளார்.

மலையாளத்தில் ‘ப்ரேமம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அதையடுத்து தெலுங்கில் ‘பிடா’, ‘எம்.சி.ஏ’ ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் மாஸ் ஹிட்டாகின. ஆகையால் தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது நடிகை சாய் பல்லவி, நடிகர் சர்வானந்தாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிக்க அவர் ஒன்றரை கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.


தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்துள்ள ‘கரு’ படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இதையடுத்து, சூர்யாவுடன் ‘என்ஜிகே’, தனுசுடன் ‘மாரி-2’ படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனக்கு வரும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்துவதில்லை. தனக்கு பொருந்தாத வேடங்களில் நடிக்க மறுத்துவிடுகிறார். சினிமாவில் தனக்கென்று ஒரு கொள்கையை வைத்து அதன்படி நடித்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி