வாய்ப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் பிக்பாஸ் நடிகை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாத்துறையில் தற்போது ஸ்டிரைக் நடந்துவருவதால், திரைப்பிரபலங்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அதில் குறிப்பாக நடிகர் விக்ரம் தனது குடும்பத்துடன் கேரளாவுக்கும், நடிகை நயன்தாரா நீண்ட நாட்களுக்குப் பிறகு, கொச்சினில் உள்ள தனது சொந்த வீட்டிற்கும் சென்றிருந்தார்.

காமெடி நடிகர் கருணாகரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஸ்டிரைக்னால வீட்டில் சும்மாயிருக்கிறதே பழகிரும்போல எனவும் பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான பிந்து மாதவி ஸ்டிரைக் காரணமாக தனது சொந்த ஊரான ஆந்திரப்பிரதேசத்திலுள்ள தேவரிந்து பள்ளிக்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் ஆடு மேய்ப்பது, மண்பானையில் சமைப்பது, கொளுத்தும் வெயில் என்று கூட பார்க்காமல் குல தெய்வ கோவில்களுக்கு நடந்து சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள பிந்து மாதவி, அதில் நகரத்திலிருந்து வந்து கிராமத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி