பிரபல இசையமைப்பாளரின் கார் திருடப்பட்டதாக பரபரப்பு..!! எப்பொழுது தெரியுமா..?


தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவரது கைவசம் தற்போது பல படங்கள் இருக்கும் நிலையில், ஒரு சில படங்களை தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில், தனது கார் திருடப்பட்டதாக சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் யுவன் ஷங்கர் ராஜா புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அந்த மனுவில் தனது விலையுயர்ந்த ஆடி காரை, தனது ஓட்டுநர் நவாஸ் கான் தான் திருடிவிட்டதாக குற்றம்சாட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

யுவன் ஷங்கர் ராஜாவின் புகார் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி