பிரபல நடிகையால் அவமானப்பட்ட ரகுல் ப்ரீத் சிங்..!! எதற்காக தெரியுமா..?


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையுலகில் இல்லை என்றார். தான் நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் யாரும் தன்னிடம் படுக்கைக்கு வருமாறு கூறவில்லை என்று மேலும் தெரிவித்தார்.

படுக்கை அல்ல திறமைக்கு தான் மதிப்பு உண்டு. திறமை இருந்தால் மட்டுமே திரையுலகில் நிலைத்து நிற்க முடியும் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்தார். நசாவுலே படம் மூலம் பிரபலமான நடிகை மாதவி. பட வாய்ப்புக்காக படுக்கை பற்றி ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்தது எல்லாம் பொய் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்னும் தெலுங்கு திரையில் உள்ளது என்று நடிகை மாதவி லதா தெரிவித்துள்ளார். மாதவியின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரகுல் ப்ரீத் உண்மையை பேசியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு நடக்கும் விஷயத்தை நடக்கவே இல்லை என்று தெரிவித்துள்ளார் என மாதவி லதா வருத்தப்பட்டுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி