வாடிவாசல் படத்தை தள்ளிப்போட்ட சூர்யா.. அதுவும் இத்தனை ஆண்டுகளுக்கா

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் தனது சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அந்த படம் தற்போது இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போகவுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.


தள்ளிப்போன வாடிவாசல்
ஆம், பாலா படம் முடித்தவுடன் சிறுத்தை சிவா, ஞானவேல் என இருவரின் படத்தில் நடிக்கவிருப்பதால், இரண்டு வருடம் கழித்து, வாடிவாசல் படத்தை துவங்கலாம் என்று வெற்றிமாறனிடம் சூர்யா கூறிவிட்டாராம்.

இதற்கு சரி என்று வெற்றிமாறனும் சொல்லிவிட்டாராம். வாடிவாசல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!