சினிமாவில் அந்த விஷயத்துக்கும் ரெடியா இருக்கேன்..!! சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல நடிகை..!!


தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரகுல் பரீத் சிங். ஆரம்பத்தில் இவர் நடித்த சில தமிழ்ப்படங்கள் சரியான வரவேற்ப்பை பெறவில்லை. இதனால், ராசியில்லாத நடிகை என்று ஓரம் கட்டப்பட்டார். ஆனால், சமீபத்தில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுத்தந்தது.

இதனால், தற்போது கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார். மேலும், பல பட வாய்ப்புகள் தேடி செல்கின்றன.

தெலுங்கில் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் ரகுல். ஆனால், தமிழில் அந்த அளவுக்கு கவர்ச்சியாக இதுவரை நடித்து கிடையாது.

இது குறித்து பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், சினிமா என்றாலே கவர்ச்சி தான். சினிமா என்பது பொழுது போக்கு மட்டுமல்ல. அதனால், எந்த மொழிப்படமாக இருந்தாலும் நான் கவர்ச்சியாக நடிப்பேன். ரியலிஸ்டிக்காக நடித்தால் மட்டும் போதுமா..? ஹீரோவுடன் டூயட் பாடுவதெல்லாம் எப்போது செய்வது..?. நான் கவர்ச்சியாக நடிக்க எப்போதும் ரெடியாக இருக்கேன் என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி