ஸ்ரீதேவியின் மகள்களுக்காக அர்ஜுன் கபூர் என்ன செய்தார் தெரியுமா..? வியப்பில் திரையுலகம்..!!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ஒரு திருமணத்திற்காக கணவருடன் பிப்ரவரி 24 ஆம் தேதி துபாய் சென்றார், அங்கு இரவு 11.30 மணியளவில் குளியலறையில் உள்ள தொட்டியின் நீரில், மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் ஸ்ரீதேவி.

இந்த நிலையில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஸ்ரீதேவியின் இறப்பிற்காக அவர்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.


அந்த வகையில், ஜான்வியை தவறாக பேசியவர்களை போனி கபூரின் முதல் மனைவி மகள் அன்ஷுலா தக்க பதில் அளித்து காட்டமாக திட்டினார்.

அதைப்போலவே, தங்கைகளான ஜான்வி மற்றும் குஷியிக்கு ஆறுதல் கூறும் விதமாக கபூரின் மகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: நானும் ஒரு நாள் இந்த வழிகளை அனுபவித்திருக்கிறேன். நிச்சயம் அதில் இருந்து வெளியேறி இயல்பு வாழ்விற்கு திரும்பவேண்டும் என்று கூறியுள்ளார் அர்ஜுன் கபூர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி