கணவரின் சர்பிரைஸை பார்க்காமலே ஏமாற்றத்துடன் மறைந்த ஸ்ரீதேவி..!! வருத்தத்தில் போனி கபூர்..!!


ஸ்ரீதேவியின் பிறந்தநாளுக்காக அவரின் கணவர் போனி கபூர் பெரிய சர்பிரைஸுக்கு ஏற்பாடு செய்திருந்திருக்கிறார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி உயிர் இழந்தார். அவரின் இறுதிச்சடங்கு மாநில அரசு மரியாதையுடன் கடந்த புதன்கிழமை மும்பையில் நடைபெற்றது.


ஸ்ரீதேவியின் மறைவால் பாலிவுட் பிரபலங்கள் கவலையில் உள்ளனர்.

ஸ்ரீதேவி தனது குடும்பத்துடன் மும்பை அந்தேரியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டு அந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் வேறு வீட்டிற்கு மாறினார்கள்.

புதிய வீட்டிற்கு வந்தாலும் ஸ்ரீதேவிக்கு அந்தேரி வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று ஆசை. இதை அவர் தனது கணவரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.


ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்த போனி கபூர் அந்தேரி வீட்டை புதுப்பித்து வந்துள்ளார். ஸ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று அவருக்கு சர்பிரைஸாக அந்த வீட்டில் குடியேற திட்டமிட்டிருந்தார் போனி.

மனைவியின் பிறந்தநாளுக்காக போனி செய்த ஏற்பாடுகள் வீணாகிவிட்டது. ஸ்ரீதேவி தனது ஆசை நிறைவேறாமலேயே இறந்துவிட்டார். ஜான்வி, குஷிக்கு போனியின் தம்பிகளான அனில் கபூர், சஞ்சய் கபூர் குடும்பத்தார் ஆதரவாக உள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி