நடிகைகளின் திரை மறைவில் நடக்கும் அந்தரங்க வாழ்க்கை..!! என்ன ஆனார்கள் தெரியுமா..?


தமிழ் சினிமாவில் குத்து விளக்காக போற்றப்பட்ட நடிகை ஸ்ரீதேவி, தன் மூக்கை ஆபரேசன் செய்து கொண்டு இந்திப் படங்களில் நடித்து, உச்சத்திற்குப் போனார். இப்போது, அவர் இறந்த செய்தியை விட, அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாலும், தண்ணீருக்குள் மூழ்கியதாலும் உயிர் இழந்தார், என்ற செய்தி தான் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

நம் தமிழ் பெண்கள் பலா், “என்ன ஸ்ரீதேவி குடிக்குமா?” என்று அதிசயமாகக் கேட்கிறார்கள். பாவம் இவர்கள். சினிமாவில் உள்ள ஒரு நடிகையின் கேரக்டரைப் பார்த்து விட்டு, இதே மாதிரி தான் நிஜ வாழ்விலும் அவா்கள் இருப்பார்கள், என்று பத்தாம் பசலித் தனமாக, கிணற்றுத் தவளைகளாக இருக்கிறார்கள்.


உண்மையான சினிமா நிலவரம் பற்றி அறிந்தால், இப்படிப் பேச மாட்டார்கள். இப்போது, சினிமாவில் வீக் எண்ட் கலாச்சாரம் பரவலாக இருக்கிறது. சனிக்கிழமை இரவு முழுக்க, பார்ட்டி விருந்து என்று கூடுகிறார்கள். அங்கு, நடிகர், நடிகையர் எல்லோருமே, மது விருந்தில் கலந்து கொள்கின்றனா்.

இது சாதாரணமான விஷயம். கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களும், இதே மாதிரியான வீக் எண்ட் பாரட்டியில், ரெகுலராக கலந்து கொள்கிறார்கள்.


அது மாதிரி தான் சினிமா இண்டஸ்ட்ரியும், என்று சர்வ சாதாரணமாக, பல சினிமா பிரபலங்களும், பிரமுகர்களும் கூறுகிறார்கள்.

சினிமாவை மட்டும் தான் பார்க்க வேண்டும். அதில் நடிப்பவர்களின் அந்தரங்கங்களை பார்க்க கூடாது. சினிமா நடிகைகளில், குடித்து குடியை இழந்தவர்கள் ஏராளம். நடிகையர் திலகம் என்று போற்றப்பட்ட நடிகை சாவித்திரி, மதுவுக்கு அடிமையானதால் தான், அவரது வாழ்வின் இறுதி நாட்களில், மிகுந்த துயரத்திற்கும் வறுமைக்கும் ஆளானார்.


நடிகர்களில் சாக்ரடீஸ் என்று புகழப்பட்ட சந்திரபாபு போல, யாரும் அவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்திருப்பார்களா? என்பது சந்தேகமே. ஆனால், அவரும் மதுவிற்கு அடிமையானதால், இறுதியில் கைச் செலவிற்கு கூட பணம் இல்லாமல், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இப்படி மதுவினால், சீரழிந்தவா்கள் பொது மக்கள் மட்டுமல்ல. சினிமா நட்சத்திரங்களும் தான். மதுவிற்கு எந்த பேதமும் கிடையாது. இந்த மதுவினால் வாழ்ந்தவர்களும் கிடையாது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி