ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு எப்பொழுது தெரியுமா..?..!! ஆழ்ந்த சோகத்தில் திரைப்பிரபலங்கள்..!!


ஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வு தற்போது நிறைவடைந்தது. அவரது உடல் விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டு இன்று பகல் 12.30 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் அவரது உடல் துபாயில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஸ்ரீதேவியின் இறப்பு சான்றிதழ் மாலை 3 மணிக்கு மருத்துவமனையில் இருந்து பெறப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்னமும் உடல்கூறு ஆய்வு அறிக்கை அளிக்கப்படவில்லை. தற்போது உடற்கூறு ஆய்வு முடிவடைந்தது.

இதுகுறித்து துபாய் தடயவியல் துறை அதிகாரிகள் கூறுகையில் ஸ்ரீதேவி முக்கியமான நபர் என்பதால் அவருக்கு விரிவான உடற்கூறு சோதனை நடைபெற்றது. அதனால் உடற்கூறு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்த சோதனை முடிந்ததால் முகைசானா என்ற இடத்தில் உள்ள ஆய்வகத்தில் அவரது உடல் பதப்படுத்தப்படும். பதப்படுத்தப்பட்டு நிர்வாக நடைமுறைகளுக்கு பின்னர் ஸ்ரீதேவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் தெரிவித்தனர்.


அவரது உடல் இன்று தனிவிமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் திரையுலகினர், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்று பகல் 12.30 மணிக்கு மும்பையில் உள்ளது அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மும்பையில் இன்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி