இனிமேல் இரவில் வீட்டில் இருக்கமாட்டாரா ஜோதிகா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


பிரபல தமிழ் சினிமா குடும்பத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டவர் நடிகை ஜோதிகா, இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே சிவகுமாரின் மகன் மற்றும் நடிகருமான சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தததும் இனி நடிக்கமாட்டேன் என்று கூறிய ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார். இந்த படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த இவருக்கு மீண்டும் பல ரசிகர்கள் கூடினார்கள்.


அதுவும் பெண் ரசிகர்கள் தான் அதிகம். பிறகு தற்போது மிகவும் அதிரடியாக நாச்சியார் படத்தில் நடித்து அசத்தியுள்ளார் ஜோதிகா. இந்த நிலையில் பாலிவுட் பிரபல நடிகையான வித்யா பாலன் நடிப்பில் வெளியான தும்ஹாரி சுலு படம் தற்போது தமிழில் எடுக்கப்போகிறார்கள். இந்த படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.


இந்த படத்தில் வித்யா பாலன் பகலில் வீட்டு வேலை செய்யும் சாதாரண பெண்ணாக இருப்பார், பிறகு இரவில் ரேடியோ ஜாக்கியாக இளைஞர்களுடன் மகிழ்வாக பேசுவார். இந்த மாதிரியான வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் வித்யா. இந்த படத்தை தமிழில் மொழி பட இயக்குனர் தான் இயக்கவிருக்கிறார். இதில் ஜோதிகா நடிக்கவிருக்கிறாராம். மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வந்துகொண்டிருக்கிறார் ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!