அட.. படம் வெளியாவதற்கு முதல்லே இப்படியா..? செம்மையா கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டில் நுழைந்து மிகவும் பிரபலமானாராம். போராளியாக பார்க்கப்பட்டவர், சில செயல்களால், ரசிகர்கள் வெறுக்க தொடங்கினார்களாம். இருந்தாலும், தனக்கு இருந்த எதிர்மறையான பிம்பத்தை வைத்தே, தொலைக்காட்சியில் தொகுப்பாளினியானாராம்.

சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் சிறு காட்சியில் தலைக்காட்டியவர், ஒரு புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வர, தலைகால் புரியாமல் இருக்கிறாராம் நடிகை.

தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே மேனஜர் ஒருவரை வைத்துக்கொண்டாராம். அவருக்கு போன் செய்து, திரைப்படங்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்து கேட்பவர்களிடம், தனது மேனஜரிடம் பேசுங்கள் என்று கூறுகிறாராம். முதல் படமே வெளியாகவில்லை அதற்குள் நடிகை ஓவராக செய்கிறாரா என்று பலரும் பேசி வருகிறார்களாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி