இரண்டு திருமணங்களால் வாழ்க்கையை தொலைத்த நடிகை சரிதா..!! என்ன ஆனார் தெரியுமா..?


1980ல் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை சரிதா. குடும்ப பாங்கான இவரது நடிப்பு அனைவரையும் சொக்க வைக்கும் வகையில் இருக்கும்.

தெலுங்கில் பாலச்சந்தரின் மரோசரித்ரா படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமகி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு 16 வயதாக இருந்தபோது வெங்கட சுப்பையா என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. இது 6 மாதம் கூட நீடிக்கவில்லை.

பின்னர் தீவிரமாக படங்களில் கவனம் செலுத்திய சரிதா பின்னர் 1988ல் மலையாள நடிகர் முகேசை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.


கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்து வந்தார். ஆனால் முகேசே மிதுல் தேவிகா என்ற பரதநாட்டிய கலைஞரை திருமணம் செய்துகொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இதனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனை தொடர்ந்து சரிதா கடந்த 2007 மற்றும் 2011ம் ஆண்டு விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்குகளில் முகேஷ் மட்டும் ஆஜராகவில்லை.

இதனால் நடிகை சரிதா தனது இரண்டு மகன்களையும் அழைத்து கொண்டு துபாய் சென்று விட்டார். அங்குதான் தற்போது மகன்களுடன் வசித்து வருகிறார். சினிமா நடிகையாக இருந்த சரிதாவின் வாழக்கையும் சினிமா கதையை விட பரபரப்பான திருப்பங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி