நடுரோட்டில் சில்மிஷம் செய்தவனுக்கு நடிகை செய்த கேவலம்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


பாலிவுட்டின் வெற்றி நாயகியாக உள்ளார் தீபிகா படுகோனே. அவர் நடிப்பில் வெளியான பத்மாவத் படம் ஹிட்டாகியுள்ளது. படம் தொடர்பாக தீபிகாவுக்கு கொலை மிரட்டல் எல்லாம் விடுக்கப்பட்டது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் தீபிகா கூறியிருப்பதாவது,

எனக்கு 14 வயது இருக்கும்போது நான் என் குடும்பத்தாரோடு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சாலையோரம் நடந்து சென்றோம். அப்பாவும், தங்கையும் முன்னால் சென்றார்கள். நானும், அம்மாவும் அவர்கள் பின்னால் நடந்து சென்றோம். நானும், அம்மாவும் நடந்து சென்றபோது ஒருவன் வேண்டும் என்றே என்னை உரசிவிட்டு சென்றான். நான் நினைத்திருந்தால் அதை கண்டுகொள்ளாமல், அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போன்று இருந்திருந்திருக்கலாம்.


என்னிடம் சில்மிஷம் செய்தவனை பின்தொடர்ந்து சென்று அவன் சட்டை காலரை பிடித்து நடுத்தெருவில் வைத்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு வந்தேன். வம்பு செய்தவனை நான் அறைந்ததை பார்த்த என் பெற்றோருக்கு இனி இவள் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை வந்தது. இனி எந்த சூழலிலும் மகள் சமாளித்துக் கொள்வாள் என்று அவர்கள் அப்போதில் இருந்து நம்பினார்கள்.

பத்மாவத் படம் தொடர்பாக என் மூக்கை வெட்டுவேன் என்று ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது. எனக்கு என் மூக்கு மிகவும் பிடிக்கும். என் பாதம் மிகவும் பெரிதாக உள்ளது. அதை வேண்டுமானால் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறி சிரித்தார் தீபிகா.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி