முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும்.. திரையரங்கு உரிமையாளர்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் டிக்கெட் கட்ட ணத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. திரையரங்குகளை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். திரையரங்குகளை தொடர்ந்து நடத்த ஏதுவாக விதிகளை தளர்த்த கோரி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்களில் நடிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் திரையரங்குகளில் படங்கள் வெளியான 8 வாரத்துக்கு பின்னரே ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என்றும் டிக்கெட் கட்டணத்தில் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. கட்டணமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!