இவரின் அடுத்த படம் இந்த மாதிரிதான் இருக்குமாம்…!! பிரபல நடிகை ஓபன் டாக்..!!


செய்தி வாசிப்பாளராக இருந்து, சீரியல் ஹீரோயினாகி… சினிமாவில் ஹீரோயினாக ஆனவர் பிரியா பவானிசங்கர். இவர் ஹீரோயினாக அறிமுகமான ‘மேயாத மான்’ ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டது. தற்போது கார்த்தியுடன் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு, எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை, ‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். ‘மாயா’, ‘மாநகரம்’ படங்களைத் தயாரித்த பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இன்னும் சில நாட்களில் ஷூட்டிங் தொடங்கும் என்கிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி