மீண்டும் விஞ்ஞானியாக மாறும் மாதவன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான மாதவன், சமீபத்தில் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது குட்டி, யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மாதவன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பிறந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் சுயசரிதை படமாக உருவாகவுள்ள படத்தை மாதவன் இயக்கி நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!