சிம்புவிற்கு நன்றி தெரிவித்த ஜெயம் ரவி.. வைரலாகும் டுவீட்

ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது. ‘பத்து தல’ படத்திற்காக ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகளில் கூடி மேள தாளத்துடன், பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி ‘பத்து தல’ திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிம்புவிற்கு நன்றியும் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், “நேற்று பொன்னியின் செல்வன் -2 விழாவிற்கு வருகைதந்ததற்கு நன்றி சிம்பு.. பத்து தல திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘பொன்னியின் செல்வன் -2’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!