நடுரோட்டில் காதலியை அடித்த வாலிபர்.. தட்டிக்கேட்ட பிரபல நடிகர்..

இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக நடித்தவர் நாக சவுர்யா. இவர் ‘பலனா அப்பாயி பலனா அம்மாயி’ என்ற தெலுங்கு படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். ஹைதராபாத்தின் பிசியான சாலை ஒன்றில் வாலிபர் ஒருவர் இளம் பெண்ணை அடித்து உள்ளார். இதை பார்த்த நாக சவுர்யா தடுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்குமாறு வாலிபரிடம் கூறினார்.

ஆனால் அந்த வாலிபரோ கோபப்பட்டு, அவள் என் காதலி என்று கூறி மன்னிப்பு கேட்க மறுத்தார். காதலியாக இருந்தாலும் அடிப்பது தவறு என்றார். மேலும் அந்த வாலிபரின் கையை பிடித்து தடுத்து நிறுத்தி மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார் நாக சவுர்யா. இதை பார்த்த அந்த பெண் தன் காதலரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

யார் யாரை அடித்தால் நமக்கென்னவென்று செல்லாமல் சாலையில் இறங்கி அந்த வாலிபரை கண்டித்த நாக சவுர்யா நிஜ ஹீரோ என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். படம் ரிலீஸாவதால் விளம்பரம் தேடி தான் நாக சவுர்யா இப்படி செய்திருக்கிறாரோ என்றும் சிலர் பேசுகிறார்கள். நாக சவுர்யாவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி திருமணம் நடந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரான அனுஷா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!