நானியின் பதிவிற்கு ரிப்ளை போஸ்ட் மூலம் பதில் கொடுத்த கீர்த்தி சுரேஷ்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘தசரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதையடுத்து சமீபத்தில் நடிகர் நானி கையில் ஒரு சிறிய கோழியை வைத்து இந்த கோழியே அவருடன் இணைந்து படத்தில் நடித்திருப்பதாக பதிவிட்டிருந்தார். இவரின் இந்த பதிவால் ரசிகர்கள் ஷாக் ஆகினர். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அதே கோழியை தன் கையில் வைத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து என்னோடும் படத்தில் நடித்திருப்பதாக நானி பதிவிற்கு பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!