பள்ளியில் படிக்கும்போது ‘மட்டன், சிக்கன் கொடுத்து தேர்ச்சி பெற்றேன்’ நடிகர் சூரி கலகல பேச்சு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக நகைச்சுவை நடிகர் சூரி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சூரி, தனது பள்ளி படிப்பு குறித்து மாணவர்களிடையே வேடிக்கையாக பேசினார்.

அவர் பேசியதாவது, உங்களை எல்லாம் வாத்தியார்கள் தான் பாஸ் செய்ய வைத்திருப்பார்கள். ஆனால், என்னை என் அப்பா தான் பாஸ் செய்ய வைத்தார். 6-ம் வகுப்பு படிக்க மதுரை நகரத்திற்கு போக வேண்டியிருந்தது. படிப்பு முடிக்கும்போது எங்க அப்பா பள்ளிக்கு வந்தார். குட் மார்னிங் டீச்சர், மை நேம் ஆர்.முத்துசாமி, மை பாதேர் நேம் இஸ் ராமசாமி. மை சன்ஸ் நேம் ராம் அண்ட் லட்சுமணன், தே ஆர் டுவின்ஸ், ராம் கலெக்டர், லட்சுமணன் என்ஜினீயர். எப்படியாவது நீங்கள்தான் கொண்டு வர வேண்டும் சார்.

அஸ்எ பாதராக நான் உங்களுக்கு புல் கோஆப்ரேட் பன்னுவேன் சார். இதுல 1½ கிலோ மட்டன் இருக்கு. இதுல 1½ கிலோ சிக்கன் இருக்கு. எனிடைம் டெல்லிங் ஐ வில் கம்மிங். அவ்வளவு தான் 6-ம் வகுப்பு பாஸ். இதே தான் 7-ம் வகுப்பிலும் 1½ கிலோ மட்டன், 1½ கிலோ சிக்கன் கொடுத்து பாஸ் ஆனேன். அதன்பின் 8-ம் என்னை வழக்கம் போல எங்கப்பா பள்ளிக்கு அழைத்து சென்றார்.

குட்மார்னிங் டீச்சர் என்ற போது நான் நிப்பாட்டுங்க அப்பா என்றேன். அவர் என்னை சும்மா இருடா என்று சொல்லி விட்டு சேம் டயலாக் அடித்துவிட்டு இந்த பக்கம் 1½ கிலோ சிக்கன் என சொல்லும் போதே அந்த டீச்சர் கிரவுண்ட்ல எங்களை ஓட விட்டார். ஏன்னா, அந்த டீச்சர் சுத்த சைவம் என்று தனது பிளேஸ்பேக் கூறி அரங்கை அதிர வைத்தார் சூரி. சூரி soori 


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!