வதந்திகளை உண்மையாக்கிய ஓவியா- சிம்பு ஜோடி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!


கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களையே அதிர வைத்த நிகழ்வு என்றால் அது சிம்பு – ஓவியா தொடர்பான புகைப்படம். இருவரும் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் வைரலாக பரவி வந்தது. பின்னர் அது போலி என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் நடிகை ஓவியா தனியார் டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்சியில் கலந்து கொண்டார்.

அதில் தொகுப்பாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு சிம்பு பாணியில் நெஞ்சில் கை வைத்து இங்க என்ன சொல்லுது. சிம்பு சிம்புன்னு சொல்லுதா என கூறினார்.


மேலும் அதே நிகழ்ச்சியில் சிம்பு போனில் பேசும்போது, நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் முடிந்து நேற்று கல்யாணமே முடிந்து விட்டது என்று கூறுகிறார். இதனை வைத்து பார்க்கும் போது இருவருமே காதல் வலையில் வீழ்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

சிம்புவின் வலையில் ஓவியா விழுந்தாரா அல்லது ஓவியாவின் வலையில் சிம்பு விழுந்தாரா என தெரியவில்லை. சிம்பு – ஓவியா காதல் உண்மையா என ரசிகர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!