பிடித்தவர்களுடன் எனது முதல் காரில் பயணிப்பது மகிழ்ச்சி – சுதா கொங்கரா பதிவு

2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

இந்நிலையில் சுதா கொங்கரா சமூக வலைத்தளத்தில் சூர்யா, மணிரத்னம், ஜி.வி.பிரகாஷ் ஆகியோருடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், எனக்குப் பிடித்தவர்களுடன் எனது முதல் காரில் பயணிப்பது மகிழ்ச்சி! என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!