நான் கேட்டால் ஓட்டுப் போடுவதில்லை.. ரம்மி மட்டும் விளையாடுவார்களா?- சரத்குமார் ஆதங்கம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், சமீபத்தில் ரம்மி விளையாட்டு விளம்பத்திரத்தில் நடித்திருந்தது பல விவாதத்தை கிளப்பியது. அவர் சூதாட்டத்தை ஆதரிப்பதாகவும் இதனால் பல குடும்பங்களில் வாழ்கை சீரழியும் அவலம் உள்ளது எனவும் பலரும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் அவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு ஓட்டு போடுங்கள் என கேட்கிறேன் ஆனால், யாரும் ஓட்டுப் போடுவதில்லை; சரத்குமார் சொன்னால் ரம்மி மட்டும் எப்படி விளையாடுவார்கள் என காட்டமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!