காந்தாரா படத்தை பார்த்து வியந்த ஹ்ரித்திக் ரோஷன் by priya | @ | December 12, 2022 2:23 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து, இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் ‘காந்தாரா’ திரைப்படம் வெளியிடப்பட்டது.இப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் வசூலில் சாதனை படைத்தது. ‘காந்தாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டினர்.இந்நிலையில் ‘காந்தாரா’ படத்தை பார்த்த நடிகர் ஹிரித்திக் ரோஷன், இப்படம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘காந்தாரா’ படத்தை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். ரிஷப் ஷெட்டி படத்தை உருவாக்கிய விதம் அசாதாரணமானது. சிறந்த கதைசொல்லல், இயக்கம் & நடிப்பு. படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு வியப்பை அளித்தது. படக்குழுவுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…