படம் கைவிடப்பட்டதா..? வெற்றிமாறன் படக்குழு விளக்கம்..

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பண்முகத்தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது ‘ருத்ரன்’, ‘சந்திரமுகி 2’, ‘அதிகாரம்’, ‘துர்கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ‘அதிகாரம்’ திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு இயக்குனர் வெற்றி மாறான் கதை, திரைக்கதை, எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்கள் எதுவும் வெளியாகாததால் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், ‘அதிகாரம்’ திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளும் படப்பிடிப்பு குறித்த திட்டங்களும் தற்போது நடைபெற்று வருகிறது என்று படக்குழு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!