நடிகர் விஜய் பெற்றோரை மதிப்பதில்லையா? என்ன பிரச்சனை.. எஸ்ஏசி சொன்ன பதிலை பாருங்க

நடிகர் விஜய் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கிறார், அவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இருந்தாலும் அவரது ஆரம்பகட்ட கெரியரில் அவருக்கு துணையாக இருந்து வளர்த்து விட்டது அவரது அப்பா எஸ்ஏசி தான்.

அவர்கள் இருவருக்கும் சமீப காலமாக பிரச்சனை இருப்பது வெளிப்படையாகவே தெரிந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் எஸ்ஏசி அது பற்றி பேசி இருக்கிறார்.

“சம்பாதிக்க ஆரம்பித்தால் பெற்றோரை மதிப்பதில்லை என நான் பொதுவாக தான் சொன்னேன். விஜய்யை குறிப்பிட்டு சொல்லவில்லை. என் வயதுக்கு நான் பல குடும்பங்களை பார்த்திருக்கிறேன் அதை பற்றி தான் கூறினேன். இந்த விஷயத்தில் விஜய் இந்த உலகத்திலேயே சிறந்தவர்” என எஸ்ஏசி கூறினார்.

மேலும் என்ன தான் பிரச்சனை என கேட்டதற்கு “எந்த வீட்டில் தான் பிரச்சனை இல்லை. உங்க வீட்டில் அப்பா எதாவது சொன்னால் உங்களுக்கு கோபம் வருவதில்லையா , இரண்டு நாள் கழித்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது இல்லையா” என அவர் தொகுப்பாளரை திருப்பி கேட்டிருக்கிறார்.

மேலும் வாரிசு படம் பற்றி கேட்டதற்கு, ‘அதன் கதை என்ன என்பது கூட எனக்கு தெரியாது. அதில் நான் தலையிடுவதில்லை’ என எஸ்ஏசி பதில் அளித்திருக்கிறார்.  

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!