விஜயகாந்த் படத்தின் கதையை திருடி படம் எடுக்கிறாரா அட்லீ.. மீண்டும் சர்ச்சை

ராஜா ராணி எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அட்லீ. இப்படம் வெற்றிபெற்றாலும், இன்று வரை மௌனராகம் படத்தின் காப்பி தான் ராஜா ராணி என திரைவட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ராஜா ராணி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் கைகோர்த்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். இந்த படங்களுக்கும் கதை திருட்டு என்ற சர்ச்சையில் அட்லீ சிக்கினார்.

அட்லீயின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ஜவான். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மேலும், வில்லனாக விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன் கூட இப்படத்தின் மோஷன் டீஸர் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அட்லீ தற்போது இயக்கி வரும் ஜவான் திரைப்படத்தின் கதையும், விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த பேரரசு திரைப்படத்தின் கதையும் ஒன்றாக இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.இதனால் மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் இயக்குனர் அட்லீ சிக்கியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்று..

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!