சாய் பல்லவி பற்றி பரவிய அந்த செய்தி உண்மையா? வந்த அதிகாரப்பூர்வ விளக்கம்

சாய் பல்லவி பற்றி ஒரு செய்தி நேற்று முதல் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
நடிகை சாய் பல்லவி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். பட விழாக்களில் அவர் பேசும்போது கிடைக்கும் ரெஸ்பான்ஸ அங்கு வேறு எந்த நடிகைக்கும் கிடைப்பதில்லை அந்த அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் அங்கு இருக்கிறார்கள்.

தற்போது சாய் பல்லவி தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கும் நிலையில் சாய் பல்லவியும் இணைந்து இருப்பதாக வந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

சாய் பல்லவி ஒரு பழங்குடியின பெண்ணாக நடிக்க இருக்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த தகவல் உண்மையா என புஷ்பா பட தயாரிப்பாளாரிடம் விசாரித்த போது அந்த தகவல் முற்றிலும் உண்மை இல்லை என தெரிவித்து இருக்கிறார். இதன் மூலமாக சாய் பல்லவி பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. 

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!