விமர்சனங்களை தாண்டிய வெற்றி.. உற்சாகத்தில் லெஜண்ட் சரவணன்..

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.

மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ௫ மொழிகளில் 2500- க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28 அன்று வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் ஐந்து வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படம் உலகமெங்கிலும் திரையரங்குகளில் ரூ.45 கோடி வசூல் செய்த நிலையில் இப்படத்திற்கான சேட்டிலைட் உரிமை ரூ. 20 கோடிக்கும் ஒடிடி உரிமை ரூ. 25 கோடிக்கும் விற்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அடுத்து அதன் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!