ஆன்மீகம் மற்றும் அரசியல் இரு துருவங்கள்…!! கருத்து சொல்லி வம்பில் மாட்டிக்கொண்ட ரஜனி..!!


1995ம் ஆண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போது, தூர்தர்ஷனில் அவர் தொடர்ந்து சில நாட்கள் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஆன்மீகம் – அரசியல் ஒப்பிடுக? என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினி “அந்த இரண்டையும் ஒப்பிடக்கூடாது. ஒப்பிடவும் முடியாது. இரண்டும் பாம்பும், கீரியும் போல் வெவ்வேறு துருவங்கள்” எனப் பதில் கூறியிருந்தார்.

ஆனால், சமீபத்தில் அரசியலில் வருவதாக அறிவித்த ரஜினி, தான் ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார். எனவே, 1995ம் ஆண்டு அவர் கூறியதற்கும், தற்போது கூறுவதற்கும் முரண்பாடு உள்ளது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிளம்பியுள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!