விவாகரத்திற்கு பிறகு சிக்கலில் மாட்டி தவிக்கும் ஐஸ்வர்யா..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாக சொந்த பிரச்சனையால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். அதிலும் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா தன் கணவர் தனுஷை சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்ய போவதாக அறிவித்தார். இது திரையுலகில் பல விமர்சனங்களை உண்டு பண்ணியது.

அது மட்டுமல்லாமல் அது குறித்து ஏராளமான செய்திகளும் வெளிவந்தது. பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை கூட பலரும் பெரிதாக பேசி சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தனர். மேலும் ஐஸ்வர்யாவின் பர்சனல் விஷயங்களை கூட ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால் ஐஸ்வர்யா அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய சொந்த வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் அவர் சூப்பர் ஸ்டாரின் மகளாக இருப்பதால் தனக்கு வந்த பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக இருப்பதால் பல இடங்களில் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மேலும் எப்போதுமே எங்களின் ஒழுக்கம் குறித்து பலரும் விமர்சனம் செய்து வருவது கஷ்டமாக இருக்கிறது.

இதை எங்களால் சமாளிக்க முடியவில்லை என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். தற்போது சோசியல் மீடியா பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் இது போன்ற பிரச்சனைகளை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் மிகப்பெரிய செலிபிரிட்டியின் மகளாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு இந்த பிரச்சனை பல வருடங்களாக இருக்கிறது.

தற்போது அதைப்பற்றி மனம் திறந்து பேசி இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் ஆறுதல்களை கூறி வருகின்றனர். தனுஷுடனான விவாகரத்துக்கு பிறகு தான் ஊடகங்கள் ஐஸ்வர்யாவின் செயல்பாடுகளை உற்று நோக்கி வருவதாகவும், அதனால் தான் அவர் இவ்வாறு பேசியிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!