என்னை அசிங்கப்படுத்திடீங்க.. செம்பருத்தி சீரியல் வில்லி ஜீ தமிழ் டிவி மீது அதிர்ச்சி புகார்

ஜீ தமிழ் சேனலில் கடந்த ஐந்து வருடங்களாகி ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் நேற்றொடு முடிவுக்கு வந்தது.

செம்பருத்தி கிளைமாக்ஸ்

செம்பருத்தி சீரியல் கிளைமாக்ஸ் எபிசோடு மட்டும் பல மணி நேரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒளிபரப்பானது. இறுதியில் வில்லி நந்தினி, வனஜா ஆகியோர் இறப்பது போல காட்டப்படுகிறது. மேலும் அகிலாண்டேஸ்வரியும் மரணமடைந்து விடுகிறார்.

செம்பருத்தி சீரியல் முடிவடைந்த பின், குழுவினர் கொண்டாடும் ஷோவும் ஒளிபரப்பப்பட்டது. அதில் நடிகர்கள் மற்றும் குழுவினர் கௌரவிக்கப்பட்டனர்.

வில்லி நடிகை புகார்

இந்நிலையில் வில்லி நந்தினி ரோலில் நடித்து இருக்கும் நடிகை மௌனிகா தன்னை அந்த ஷோவில் அசிங்கப்படுத்திவிட்டார்கள் என ஜீ தமிழ் மீது புகார் கூறி இருக்கிறார்.

“செம்பருத்திக்காக என்னுடைய பெஸ்ட் கொடுத்தேன். ஆனால் சேனல் எனக்கு திருப்பிதரவில்லை. மெயின் ரோலில் நடித்த நடிகையை மட்டும் கொண்டாடுகிறீர்கள். எனக்கு எந்த மரியாதையும் கொடுக்க வேண்டும் என தோன்றவில்லையா ஜீ தமிழ்.”

“என்னை எதற்காக அழைத்தீர்கள். எனக்கு மொமெண்டோ எங்கே. என்னை இன்சல்ட் செய்துவிட்டேர்கள். நான் சோகமாக தான் இருக்கிறேன். மக்கள் என்னை ஏற்றுக்கொண்டு என்னை கொண்டாடுகிறார்கள். அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.”
இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!