விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் சினிமா நடிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் ஜல்லிகட்டு நிகழ்ச்சியின் போது குரல் கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜூலி .
இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் நிகழ்ச்சியில் இவரின் நடிப்பு மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ஜூலி அதிகமாகவே வெறுப்பைதான் சம்பாதித்தார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் கலைஞர் டிவியில் தொகுப்பாளினியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் இவர் தற்போது படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார்.
அந்த படத்தில் கதைப்படி ஜூலி சமூக அக்கரை கொண்ட ஒரு பெண்ணாக ஜூலியான என்ற பெயரிலே நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!