முதல் முறையாக இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

முதல் முறையாக இப்படியொரு கதாபாத்திரத்தில் நயன்தாரா
நடிகர் நயன்தாராவின் 75வது படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. இப்படத்தை Trident Arts – Naad Studios – Zee Studios என மூன்று நிறுவனம் ஒன்றிணைந்து தயாரிக்கிறார்கள்.

நிலேஷ் கிருஷ்ணா எனும் புதுமுக இயக்குனர் நயன்தாராவின் 75வது படத்தை இயக்கிறார். இவர், இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் ஆவர்.

மேலும், இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை நயன்தாரா செஃப் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக நடிகை நயன்தாரா செஃப்பாக நடிக்கவுள்ளார். இதனால், இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!