விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்துவிட்டது – எஸ்.ஏ. சந்திரசேகர்

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


தற்போது, வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருவதாகவும் அதற்காக விஜய் ஐதராபாத் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் பிறந்த நாள் மற்றும் ஆயுஷோமம் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது என்பதை விஜய் சிந்திக்க வேண்டும் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார். மேலும், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்படுவார்கள் என்றும் நிர்வாகிகளை மீண்டும் இணைப்பது குறித்து பலமுறை விஜய்யிடம் பேசியுள்ளேன் என்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!